வங்கிகளில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்!

இந்த ஆண்டின் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் பொதுத் துறை வங்கிகளில் ரூ.95,760 கோடிக்கு மேல் நிதி மோசடிகள் நடைபெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இந்திய வங்கிகளில் வாராக் கடன் பிரச்சினை நீண்ட காலமாகவே இருந்துவருகிறது. பெரும் தொழிலதிபர்கள் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்வதால், நிதி நெருக்கடிக்கு உள்ளாகும் வங்கிகள், விவசாயம், சிறு நிறுவனம் ஆகிய துறை


வாராக் கடன் மட்டுமே வங்கிகளுக்குத் தலைவலியாக இருக்கவில்லை; அதை விட அதிக இழப்புகள் நிதி மோசடிகளால் ஏற்படுகின்றன.


அதாவது, போலியான ஆவணங்களைக் கொண்டு கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் பலர் ஏமாற்றுகின்றனர். மோசடி கண்டறியப்படுவதற்கு முன்னர் நாட்டை விட்டே தப்பியோடியவர்களின் பட்டியலும் நீண்டுகொண்டிருக்கிறது.


இந்த ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் மட்டும் இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளில் மொத்தம் 5,743 நிதி மோசடிகள் நடந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


நவம்பர் 19ஆம் தேதி மாநிலங்களவையில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு கீழ்க்காணும் விவரங்களை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.


Popular posts
காட்பாடியில் சமூக ஆர்வலர்களால் கபசுர குடிநீர் சூரணம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
Image
அழகு அரூர் காப்போம் அமற்றும் அரூர் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் வருகின்ற 24 - 4 - 2020* அன்று அரூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு கருதி அருகிலுள்ள அரசு கலைக்கல்லூரியில் இரத்தம் எடுக்கப்படும் நடைபெற உள்ளது
Image
இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலியானோர் எண்ணிக்கை 1,016 ஆக உயர்வு
Image
வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை சேர்ந்த உதயகுமார் (38)மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.
Image
வண்டலூர்- வாலாஜாபாத் சாலையோரம் மரக்கன்றுகளை நட பொதுமக்கள் கோரிக்கை
Image